வாஷிங்டன், ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது டீசல் ஒரு கேலனுக்கு $5.85 (இந்திய மதிப்பில் ரூ. 552.42) என்ற அளவில் விற்பனையாகிறது. இது அங்கு இதுவரை இல்லாத அளவைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. (ஒரு கேலன் என்பது 3.785 லி கொள்ளளவு) அமெரிக்காவில் இந்த விலை உயர்வால் அரசியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் வாக்காளர்களின் கவனம் பொருளாதார விவகாரங்களைப் பொருத்தே அமைய வாய்ப்புள்ளது. டீசலைப் போன்றே பெட்ரோலின் விலையும் அங்கு உயர்ந்து வருகின்றது. ஆனால், டீசலுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையேற்ற வேகம் குறைவே. அமெரிக்காவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை $3.20 ஆக இருந்த நிலையில், தற்போது அது $4.15 ஆக உயர்ந்துள்ளது. சமீப நாள்களில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/us-diesel-prices-hit-a-record-high-of-585-on-average-as-the-iran-war-disrupts-the-flow-of-fuel




