பெரம்பூர் சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசி சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரெயில் சென்றது. கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மேல்நிலை மின்கம்பி அமைப்பின் தாங்கு கம்பியில் ரெயில் பெட்டியின் சிறிய அளவிலான படிக்கட்டு சிக்கியதாக கூறப்படுகிறது. பயணிகள் அதிர்ச்சி இதனால் படிக்கட்டு உடைந்து தொங்கியது. தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர் ரெயில் நிலைய நடைமேடைகளில் படிக்கட்டு உரசியபடி சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்திய டிரைவர், இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ரெயில்வே ஊழியர்கள் சேதமடைந்த படிக்கட்டை சீரமைத்தனர். அதன்பிறகு அந்த ரெயில் மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், ரெயில் பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-electric-train-staircase-breaks-rubs-platform-passengers-shocked




