தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கான தண்ணீரை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை திறந்து வைத்தார். 91 அடியாக நிறைந்துள்ள மேட்டூர் அணையில் இருந்து அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் இது குறித்து தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ``கேரளா, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்து நிரம்பியது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12- ம் தேதிதான் அணை திறக்கப்படுவது வழக்கம் என்றாலும் அதிக மழைப்பொழிவு காரணமாக 11 முறை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டுக்கால வரலாற்றில், காலதாமதமாக 62- வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/mettur-dam-opened-for-agriculture-by-cm-vijay




