சென்னை, தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:- யாரை பார்த்தும் முதல்-அமைச்சர் விஜய்க்கு பயம் இல்லை. அனைத்து கட்சி கூட்டம் நடத்த என்ன பயம் என உதயநிதி கேட்கிறார். 3 வருடங்களாக எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஒருமனதாக தான் தீர்மானத்தை நிறைவேற்றின. நாளைய எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? தொகுதி மறுவரையறை குறித்து அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நாளை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூற வேண்டும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-participate-in-tomorrows-mp-meeting-minister-nirmal-kumar-questions-in-the-assembly




