கோவை நவஇந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிக குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதிய வேளையில் அங்குள்ள ஒரு வீட்டில் தொழிலாளர்கள் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்றவைத்தபோது, எதிர்பாராதவிதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும், அது கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்து இருந்த தகர வீடுகளுக்கும் வேகமாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக குடியிருப்பில் இருந்து வெளியேறினர். தீ விபத்து தீயின் தாக்கம் தீவிரமடைந்ததால், வீடுகளுக்குள் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் 50க்கும் மேற்பட்ட தகர வீடுகள் தீக்கிரையாகின. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் 60-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், குடியிருப்புக்குள் வெடிக்காமல் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கனேசன் கூறும் போது, “விபத்து நடந்த இடத்தில் சுமார் 40 முதல் 50 சிலிண்டர்கள் வரை வைக்கப்பட்டிருந்தன. அதில் வெடிக்காத நிலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களைத் தீயணைப்பு வீரர்கள் மூலம் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்துள்ளோம். இத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தினுள் இருக்கும் வெப்பம் மற்றும் புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, காவல்துறையினர் அப்பகுதியைப் பாதுகாப்பில் கொண்டு வந்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கண்காணித்து வருகின்றனர்” என்றார். `சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/accidents/50-houses-gutted-in-a-fire-caused-by-the-explosions-of-20-cylinders-in-coimbatore




