தேன், பசு நெய், சமையல் எண்ணெய், ஆப்பிள் சைடர் வினிகர், விர்ஜின் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், இளநீர், தேங்காய் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களில், "100 சதவீதம் இயற்கையானது", "100 சதவீதம் தூய்மையானது", "100 சதவீதம் தூய்மை உத்தரவாதம்", "100 சதவீதம் ஆர்கானிக்" போன்ற வாசகங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) குற்றம்சாட்டியது. இந்த வகையான "100 சதவீதம்" என்ற வாசகங்கள் தெளிவற்றவை, சரிபார்க்க முடியாதவை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விளம்பரங்கள் மற்றும் கோரிக்கைகள்) விதிகள், 2018-க்கு முரணானது என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, இத்தகைய விளம்பர வாசகங்களுடன் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து, 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் டாபருக்கு உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/dabur-moves-delhi-hc-against-fssai-ban-on-selling-food-products-with-100-pc-claims




