நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 20 காசுகள் அதிகரிப்பு நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 535 காசுகளாக (ரூ.5.35) இருந்து வந்தது. இதற்கிடையே நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் அதிகரிக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை தற்போது 540 காசுகளாக (ரூ.5.40) அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து உள்ளது. தேவை அதிகரித்து உள்ளதன் காரணமாக விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-have-risen-by-20-paise-in-four-days




