மிக பயங்கரமான போர். தற்காலிக போர் நிறுத்தம். அவ்வப்போது தாக்குதல்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம். போர் நிறுத்தம். மீண்டும் போர் - இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர். ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். தற்போது அவரது மகன் மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொஜ்தபா காமேனிசரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி அயோதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கிற்கு பின், மொஜ்தபா காமேனி, "இந்தப் பழிவாங்கல் நமது நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இது நிச்சயமாக நிறைவேற்றப்படும். மேலிடத்திலிருந்து கீழ்மட்டம் வரை யாருடைய பெயர்களெல்லாம் தெளிவாகத் தெரியுமோ, அந்தக் குற்றவாளிகள் அனைவரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையுடனேயே தங்களின் கல்லறைகளுக்குச் செல்வார்கள். இந்த நடவடிக்கை எனது தனிப்பட்ட இருப்பையோ அல்லது வேறு எந்தவொரு அதிகாரியின் பதவியையோ பொறுத்தது அல்ல என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார் இந்த நிலையில், ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் மத்தியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளை மாளிகை எரிந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், ட்ரம்பின் ஐந்து பிள்ளைகள் இவான்கா, டான் ஜூனியர், எரிக், டிஃபானி, பேரன் ஆகியோரின் புகைப்படங்கள் கல்லறையுடன் இடம்பெற்றுள்ளது. அந்தப் பேனரில் பெர்ஷிய மொழியில், 'ரத்தத்திற்கு ரத்தம்' என்றும் எழுதப்பட்டுள்ளது. Gold: இப்போது குறையும் தங்கம் விலை; இதற்கான 3 காரணங்கள் என்னென்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/blood-for-blood-iran-chilling-warning-to-trump-family




