மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், ஒடிசாவில் இருந்து மும்பை வரை 24 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த ரசிகரின் கனவு தற்போது நனவாகியுள்ளது. 24 நாட்கள் சைக்கிள் பயணம் ரோகித் சர்மாவின் தீவிர ரசிகரான அந்த இளைஞர், அவரை நேரில் சந்திப்பதற்காக ஒடிசாவில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு 24 நாட்கள் பயணம் செய்து மும்பையை சென்றடைந்தார். ரசிகருடன் புகைப்படம் எடுத்த ரோகித் ரசிகரின் அன்பையும் முயற்சியையும் அறிந்த ரோகித் சர்மா, அவரை நேரில் சந்தித்து உரையாடினார். மேலும், ரசிகருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது, ரோகித் சர்மாவுக்கு ஜெகந்நாதர் சிலையை அந்த ரசிகர் அன்புடன் பரிசாக வழங்கினார். நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்து வந்த ரசிகரின் கனவை ரோகித் சர்மா நிறைவேற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/a-24-day-bicycle-journey-to-see-rohit-hitman-makes-an-odisha-fans-dream-come-true




