உடுமலை, திருப்பூர் மாவட்டம், உடுமலை, மரிக்கந்தை கிராமத்தில், கால்நடை மட்டுமே புடைப்புச்சிற்பமாக இருக்கும் கல்துாண், 2 அடி அகலத்தில், 1 அடி உயரத்தில் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் உள்ளது. அழகான வேலைப்பாடுகளுடனும், அலங்கரித்த நிலையில் மாடு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, கல்வெட்டு எழுத்துகளும் காணப்படுகின்றன. இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'இந்த கல்வெட்டு, பாளையக்காரங்கள் ஆட்சி காலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டிருக்கலாம். பாரம்பரியமாக கால்நடைகளை தெய்வமாக வழிபடும் முறை இருந்துள்ளதை இது உறுதிப்படுத்தியுள்ளது.” என்று அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/300-year-old-relief-sculpture-unearthed-in-tiruppur




