தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது. அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும். இதில் திருச்சி கிழக்கை தவிர, மீதமுள்ள தொகுதிகள் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகள் ஆகும். இந்தத் தொகுதிகளில் விரைவில் இடைதேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் அதாவது, தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது என்று அந்த உத்தரவு கூறுகிறது. அப்படியென்றால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த முடியாது. ஆக, தேர்தல் வழக்கு முடிந்தால் தான், இந்தத் தொகுதிகளில் இடைதேர்தல் நடத்தப்பட முடியும். திமுக, தவெக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மேலும், இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இந்தத் தீர்ப்பு 'செக்'காக அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/madras-hc-bars-bypoll-notification-in-seats-facing-election-cases




