சிவகங்கை, சிவகங்கை அருகே காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த காளையார்கோவிலை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு காரில் மது அருந்தினர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு ஒரு சொகுசு காரில் வந்தனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து அவர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது. ஓட ஓட விரட்டி கொலை அப்போது, அந்த பகுதிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் திடீரென வந்தனர். அவர்கள் காரின் அருகே அமர்ந்திருந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்தனர். ஆபத்தை உணர்ந்த இரண்டு இளைஞர்களும் தப்பிப்பதற்காக கண்மாய் பகுதியை நோக்கி ஓடினர். ஆனாலும் விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், இருவரையும் ஓட ஓட விரட்டி பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை மற்றும் உடல் பகுதிகளில் கொடூரமான வெட்டுக்காயங்கள் விழுந்து, தலை சிதைந்த நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. போலீஸ் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivagangai-two-youths-drinking-in-luxury-car-chased-and-hacked-to-death




