சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ந் தேதி பதவியேற்றார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அரசுப் பணிக்கு ஊழியர்கள் வருவதுபோல், முதல்-அமைச்சர் விஜய்யும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வருகை தந்து, தனது பணிகளை கவனித்து வருகிறார். பட்ஜெட் தயாரிப்பு பணி தற்போது, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அவர், தினமும் ஒவ்வொரு துறைகளின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்-அமைச்சர் விஜய்யுடன் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு இடை இடையே முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று (8-ந் தேதி) முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்தித்து பேசினார். அப்போது, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தினத்தந்தி குழும இயக்குநர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் உடன் இருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dinathanthi-group-chairman-cbalasubramanian-adithyan-meets-chief-minister-vijay




