ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகாவீர் கர்ணா’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான 'ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்' திரைப்படமான ‘மகாவீர் கர்ணா’ படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ‘ராட்சசன்’ மற்றும் ‘கில்லாடி’ உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். ஆக்சன், திரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் படைக்கிறார். ‘மகாவீர் கர்ணா’ மூலம், லைவ்-ஆக்சன் வடிவத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும், நவீன விஷுவல் எபெக்ட்ஸின் எல்லையற்ற சாத்தியங்களையும் ஒன்றிணைக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்சன் முறையை அவர் கையாண்டுள்ளார். கர்ணனை படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இந்த முயற்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. கர்ணனின் கதை வெறும் புகழைத் தேடும் ஒரு வீரனின் கதை மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்கை அனைத்திற்கும் மேலாகக் கருதிய ஒரு மனிதனின் கதை. குந்திக்கு பிறந்தாலும், அரச குடும்ப அங்கீகாரத்திலிருந்து விலகி வளர்ந்த கர்ணன், நிராகரிப்பு, அடையாளம் மற்றும் விதி ஆகியவற்றுடன் தனது வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். இருந்தாலும், தான் தேர்ந்தெடுத்த மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது. கர்ணனின் கொடைத்தன்மை தான் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக எந்த விளைவையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்த கர்ணனின் உறுதியும், அவரது புகழ்பெற்ற கொடைத்தன்மையும், அவரது குணத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. தன் வார்த்தையை மீறுவதைவிட அதன் விளைவுகளை எதிர்கொள்வதையே விரும்பியவர் கர்ணன். இந்த சமரசமற்ற குணமே, மகாபாரதத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதாபாத்திரங்களில் ஒருவராக கர்ணனை மாற்றுகிறது. இதுவே ‘மகாவீர் கர்ணா’ படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக அமைந்துள்ளது. டீசர் வெளியானது இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில், வீரர்கள், ராஜ்ஜியங்கள், ஆயுதங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும் விஷயம், தான் கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கும் ஒரு மனிதனின் இருப்புதான். கர்ணனை வெறும் புராணக் கதாபாத்திரமாகவோ அல்லது பிரம்மாண்டமான புராண திரைப்படமாகவோ அணுகாமல், கௌரவம், விசுவாசம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை டீசரின் காட்சியமைப்பு உணர்த்துகிறது. இந்த ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் அணுகுமுறை, பிரம்மாண்டம், காட்சியமைப்பு மற்றும் சினிமா உலக உருவாக்கம் ஆகியவற்றில் இயக்குநர் ரமேஷ் வர்மா புதிய முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை அரிதாக முயற்சிக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை, படத்தின் காட்சியனுபவத்தை மேலும் பிரம்மாண்டமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பக் குழுவில், முன்னணி கிரியேட்டர் ராம்ஜி டாட் ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீமணி வசன எழுத்தாளராகவும், ஞானி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இதுவரையிலான படைப்புகளில் மிகவும் பிரம்மாண்டமான முயற்சியாக உருவாகி வரும் ‘மகாவீர் கர்ணா’, இந்தியாவின் மிகச்சிறந்த காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனை புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக மாற்றும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இப்படம் டிசம்பர் 4-ந்தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா திரையரங்க வெளியீடாக வெளியாகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mahaveer-karna-film-teaser-out




