சென்னை, மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும் இங்கிலாந்து கேப்டன் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். இறுதிப்போட்டி 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, கேப்டன் நாட் சிவர்-பிரண்டின் பொறுப்பான ஆட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. சிவர்-பிரண்ட் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்தார். இதையடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7-வது மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. அந்த அணியின் பெத் மூனி 64 ரன்கள் குவித்தார். சாதனை படைத்த கேப்டன் இங்கிலாந்து அணி ரன்னர்-அப் பட்டத்துடன் தொடரை நிறைவு செய்தாலும், கேப்டன் நாட் சிவர்-பிரண்ட் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரு நாக்-அவுட் ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனாக அரையிறுதி ஆட்டத்தில் நாட் சிவர்-பிரண்ட் 75 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-t20-wc-we-were-outplayed-by-a-class-australian-side-says-sciver-brunt-after-england-loss




