விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ``1989-ல் நான் பிறந்ததிலிருந்தே என் வாழ்க்கை சிலிர்ப்பூட்டும் வகையில் தான் அமைந்துள்ளது. பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ, 'பிளெண்டர்ஸ் பிரைடு' குடித்த காலமும் உண்டு, 'கிளென்ஃபிடிச்' குடித்த காலமும் உண்டு. ஆனால் இப்போது நான் மதுப்பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட்டேன். நான் காதலித்தேன், காதலில் தோல்வி அடைந்தேன். பின்னர் திருமணமும் செய்துகொண்டேன். விஜய் தேவரகொண்டா என்ன நடந்தாலும் என் வாழ்க்கை மிகவும் விறுவிறுப்பாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது." என்றார். அதைத் தொடர்ந்து இடுப்பு எலும்பு முறிவால் ஓய்வெடுத்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஜய், ``உங்கள் அண்ணி நலமாக இருக்கிறார். படப்பிடிப்பில் காயமடைந்த அவர், தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு குணமடைந்து வருகிறார்" என்றார். ரஷ்மிகா நடிப்பில் 'மைசா' திரைப்படமும், விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படமும் வெளியாகவுள்ளன. மேலும், இவ்விருவரும் இணைந்து நடித்த 'ரணபலி' திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/tollywood/actor-vijay-deverakonda-has-shared-details-about-his-life-experiences


